மற்றொரு சொல்லெனப் பசி நெளியும் கவிதை

மற்றொரு சொல்லெனப் பசி நெளியும் கவிதை

மழையின் பெருந்துளிகளெனத் தூறியபடியிருக்கும் இந்த முன்னிரவைச் சூழ்ந்திருக்கும்  இருளைப் புகையச் செய்து  காகிதத்தின் ஓரத்தில் ஒரு படமாக்கி முடிக்கிறேன். படத்தினுள்ளிருந்து நானெனப்படும் ஒளியினுஷ்ணம் ரிதங்களுடன் அசையத்தொடங்குகிறது.