இரவாகுதல்

என்னை இன்னொன்றாக்கும் வித்தையை இந்த நள்ளிரவு காட்டித்தர மறுப்பதும், ஒன்றாகத் தொடர்ந்திருக்கும் அவதிக்குள் கிடந்து தவிப்பதுமாக உழலுகிறது நானாகிய பாவம்.

கனவுகளிலிருந்து விடுபட்ட ஒரு அதிகாலையின் மூன்று சம்பவங்களாக இக்கவிதை இருக்கிறது

ஒன்று: இல்லாதிருத்தலை நட்டுவைத்து கனவுகளின் நிழலினை அருந்தியபடி உறங்கிப் போனேன். பூப்பூவாக நான் பூத்திருக்கிறது காலையில் -கனவுகளிலிருந்தே மதுவுக்கும் ஒரு முத்தத்தின் வழி போதை தொற்றியிருக்க வேண்டும்-